search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "என்ஆர் தனபால்"

    ராயபுரத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு ரெயில் சேவையை இயக்க வேண்டும் என்று பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் கோரிக்கை விடுத்துள்ளார்.
    சென்னை:

    பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற தென் மாவட்டங்களை சார்ந்த மக்கள் சென்னையில் வியாபாரம் செய்து தொழில் நடத்தி வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர்கள் ராயபுரம், வண்ணாரப்பேட்டை, தண்டையார் பேட்டை, திருவொற்றியூர், மணலி போன்ற வடசென்னை பகுதியில் வசித்து வியாபாரம் செய்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் தென் மாவட்டங்களுக்கான ரெயில் சேவையை தாம்பரத்திலிருந்து தொடங்குவது என்பது தவறானகொள்கை முடிவாகும். ராயபுரத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு ரெயில் சேவையை தொடங்குவது தான் சரியானதாக இருக்கும். அதுதான் தென்மாவட்ட மக்களுக்கும், வடசென்னை வியாபார பெருமக்களுக்கும் வசதியானது என்பதை கருத்தில் கொண்டு தென்னக ரெயில்வே தங்களது முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Tamilnews
    ×